பொடுகு தொல்லையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக தலைமுடி பிரச்சனைகளில் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை இந்த பொடுகு தான்.
அந்தவகையில், பொடுகு பிரச்சனையை குணப்படுத்த இந்த 2 பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- பூண்டு- 5 பல்
- தேன்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டை நன்றாக அரைத்து பேஸ்ட் தயாரித்துக்கொள்ளவும்.
பின் இதில் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து இந்த கலவையை தலையில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டுவிடவும்.
பின்பு தலைமுடியை சாதாரண தண்ணீரால் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- பூண்டு- 5 பல்
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய ஊற்றி அதில் பூண்டை சேர்த்து சூடாக்கவும்.
பின் இந்த எண்ணெய் குளிர்ந்த பிறகு தலையில் தடவி 30 நிமிடம் விட்டுவிடவும்.
பின்பு மென்மையான ஷாம்பூ கொண்டு தலைமுடியை கழுவவும்.
இந்த பூண்டு எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முடிவேர்களை பலப்படும் மற்றும் பொடுகை குறைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |