அடர்த்தியான கூந்தலை பெற இந்த ஒரு இலை போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வெங்காய ஜூஸ்- ¼ கப்
- கறிவேப்பிலை- 2 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் கறிவேப்பிலையை எடுத்து அரைத்து அத்துடன் வெங்காய சாறை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதனை கலந்து தலைமுடியின் வேர்வரை தேய்த்துக்கொண்டு பின் அரைமணி நேரம் தலையில் ஊறவைக்கவும், அதன்பின் தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு மூன்று முறை இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- கறிவேப்பிலை- சிறிதளவு
பயன்படுத்தும் முறை
தேங்காய் எண்ணெய்யை நன்கு சூடுபடுத்தி அதன்பின் சுத்தமான கறிவேப்பிலையை அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கறிவேப்பிலை நன்கு சுருங்கிய பிறகு, அதனை ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |