முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க உதவும் அரிசி நீர்.., எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க உதவும் அரிசி நீரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கப் அரிசியை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சாதத்தை வேக வைக்க வேண்டும்.
பின் சாதம் வெந்ததும், அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வடிகட்டிய அரிசி நீரை நன்கு குளிர வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

இதனை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 2 நிமிடம் காய வைக்க வேண்டும்.
பின்பு குளிர்ந்த நீரில் பஞ்சுருண்டையை நனைத்து முகத்தை துடைக்க வேண்டும்.
இதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்தி வர முகத்தல் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்கும்.
கிடைக்கும் நன்மைகள்
அரிசி நீரில் சருமத்திற்கு நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும்.
இதில் உள்ள இனோசிட்டால் சரும செல்களை சரிசெய்து, சரும நிறத்தை மேம்படுத்தி, கரும்புள்ளிகளை குறைக்க உதவும்.
அரிசி நீர் சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி, முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
மேலும், இது திறந்த சருமத்துளைகளை இறுக்கமாக்கி, சருமத்தின் அமைப்பையும் அழகையும் மேம்படுத்தும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |