ஒரே வாரத்தில் சரும பொலிவை அதிகரிக்க உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை அழகாக வைத்துக்கொள்ளத்தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், ஒரே வாரத்தில் சரும பொலிவை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- பாதாம் எண்ணெய்- ½ கப்
- கேரட்- 1
- ஆரஞ்சு- 1
- பீட்ரூட்- 1
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும்.
இதையடுத்து கேரட், பீட்ரூட் மற்றும் ஆரஞ்சு தோலை துருவி எண்ணெய்யில் சேர்த்து 10 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்கவைக்கவும்.
பின்னர் இது சூடு ஆறியதும் இந்த எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
பின்னர் இந்த எண்ணெய்யைக் கொண்டு முகத்தில் மேல்நோக்கி நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்தி வர முகத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி முகம் நன்கு வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |