சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி
பிரித்தானியா, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையிலான கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது மட்டுமின்றி, சட்டப்படி புலம்பெயர்ந்தவர்களுக்கும் இப்போது பிரச்சினை உருவாகியுள்ளது.
உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி
ஆம், சட்டப்படி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பல ஆண்டுகளாக பணி செய்துவருபவர்களின் பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

2022ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து care worker விசாவில் பிரித்தானியாவுக்கு வந்தவர் Varuni Arachchige.
அவருடன் அவரது கணவரும் முறையே 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் நிலையில், Varuniயின் கணவரும் பிள்ளைகளும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.
அதேபோல, 2022ஆம் ஆண்டு தன் மனைவி மற்றும் முறையே 12, 9 மற்றும் 8 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் care worker விசாவில் பிரித்தானியாவுக்கு வந்தவர் Rasika Samarasinghe.

தற்போது, Rasikaவின் பிள்ளைகளும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.
ஆக, பிள்ளைகளை தனியாக விட்டு விட்டு வாழ்வது எப்படி என திகைத்துப்போயிருக்கிறார்கள் அந்த பெற்றோர்கள்.
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல், care worker ஆக பணி புரிவோர் தங்கள் குடும்பங்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர அனுமதி இல்லை.
அதேபோல, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம், வெளிநாடுகளிலிருந்து care worker பணியாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், தற்போது பிரித்தானியாவை விட்டு வெளியேறும்படி உள்துறை அலுவலகத்தால் அறிவுறுத்தபட்டுள்ளவர்கள், இந்த விதிகள் அமுலுக்கு வரும் முன்பே பிரித்தானியாவுக்கு வந்தவர்கள்.
ஆக, சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளைப் பிரிப்பதன் மூலம், அவர்களுடைய எதிர்காலத்தைக் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது பிரித்தானிய அரசு!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |