அசிடிட்டியால் அவதிப்படறீங்களா? இதனை எப்படி எளியமுறையில் தடுக்கலாம்?
நாம் உண்ட உணவு செரிமானமாக வயிற்றுப்பகுதியில் “HydroChloric Acid” என்ற அமிலம் சுரக்கின்றது அது அளவுக்கு அதிகமாக சுரக்கும்பொழுது அசிடிட்டி வருகின்றது.
காலை உணவு உண்ணாமல் வெரும் வயிற்றுடன் இருப்பதாலும், உண்ட உணவு சரிவர செரிமானமாகாமல் இருப்பதாலும்; மேலும், Hydrochloric Acid வயிற்று பகுதியில் அதிம் சுரப்பதாலும்; அதிக குடி மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாவதாலும் அசிடிட்டி வருகின்றது என்று சொல்லப்படுகின்றது.
நோய் வந்தபின், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதைவிட, நோய் வரும் முன் காப்பதே மிகச்சிறந்தது
அந்தவகையில் அசிடிட்டியால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து எளியமுறையில் நிவாரணம் பெற என்ன வழிமுறைகள் என்பதை பற்றி பார்ப்போம்.
- கொத்தமல்லி கலந்த தண்ணீரை தொடர்ந்து அருந்தி வரவும்.
-
உணவு சாப்பிட்ட பிறகு, பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால், செரிமானம் சிறந்த முறையில் இருக்கும். மதிய வேளையில், பெருஞ்சீரகம், கல் உப்பு கலந்து தயாரித்த சர்பத்தை பருகி வரலாம்.
-
உலர் பழங்களை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை அருந்தவும்.
-
இரவு படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான பாலில், ஒரு தேக்கரண்டி அளவு பசுநெய் கலந்து குடிக்கவும். இது உறக்கமின்மை மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வு ஆகும்.
-
பன்னீர் மற்றும் புதினா தண்ணீரை அவ்வப்போது அருந்தி வரவும். இதன்மூலம், செரிமானம் சீராகும்.
-
இனிப்பு மாதுளம் பழங்கள், வாழைப்பழங்கள், சுண்டவைத்த ஆப்பிள்கள், பிளம்ஸ் பழங்கள், உலர் பழங்கள், ஏப்ரிகாட் பழங்கள், தேங்காய் என அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தாராளமாக உண்டு வரவும்.
-
நெல்லிக்காய் ஜூஸை, நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 மில்லி அளவில் குடித்து வரவும்.
- மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், அரை தேக்கரண்டி அளவிற்கு நெல்லிக்காய் பொடி சாப்பிட்டு வரவும்.
-
ஒரு தேக்கரண்டி சதாவரியை பாலுடன் சேர்த்து தினமும் அருந்தி வரவும்.
-
அதிமதுரம் வேர் பொடியை ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
-
சோற்றுக் கற்றாழை சாற்றை, 20 மில்லி அளவிற்கு வெறும் வயிற்றில் காலை, மாலை என இரு வேளைகளுக்கு அருந்தவும்.