கருவளையத்தை நிரந்தரமாக நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
சில பெண்களுக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையத்தை நிரந்தரமாக நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை அரைத்த சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அதை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கண்களை சுற்றியுள்ள கருவளையம் நிரந்தரமாக நீங்கும்.
2. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுத்து, அதனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதனை கண்களைச் சுற்றி தடவி, 5 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் கண்களை கழுவிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |