முகம் அழுக்கா தெரியுதா? இதனை போக்க இவற்றில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும்!
பொதுவாக சருமத்தில் பலதரப்பட்ட செயற்கை பராமரிப்புகளை மாறி மாறி செய்வதால் முகத்தில் பொலிவு மங்குவதோடு அழுக்குகளும் படிய தொடங்கும்.
அதனோடு சருமத்துளைகளில் அழுக்குகள், மரபணு தோல் நிலை, மாசு, சூரியனால் பாதிப்பு போன்ற நிலைகள் சரும சேதத்தை இன்னும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.
இவற்றை போக்க தொடர்ந்து செயற்கை பொருட்களை தான் பயன்படுத்தலாம் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.
அந்தவகையில் முகத்தின் மாசுக்களிலிருந்தும், அழுக்குகளிலிருந்தும் முகத்தில் கரும்புள்ளிகள், கறைகள் போகவும் என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
- கற்றாழை மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை போக்க செய்யலாம். தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் கறைகள் போக கூடும். முகத்தில் தடவும் போது முழங்கைகள், கால்களில் ஜெல்களை தடவினால் கருப்பு நீங்கும்.
- கோக்கோ பட்டர் சருமத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்றி சருமத்தை மென்மையாக வைத்திருக்க செய்யும். கொக்கோ பட்டர் உதடுகளுக்கு தடவினால் உதடுகளும் மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க செய்யும்.
- முட்டையின் வெள்ளைக்கரு புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் வளமான ஆதாரம். இது பாக்டீரியாவை தடுக்க செய்கிறது. வறண்டிருக்கும் பருக்கள், சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய், கறைகள் போன்றவற்றை நீக்கி சருமத்தை மெருகேற்ற செய்யும். முட்டை வெள்ளைக்கருவை பயன்படுத்துவது சரும தொனியை வெளியேற்றி சருமத்தை அழகுப்படுத்துகிறது.
- உருளைக்கிழங்கு சாறு சருமத்தின் மிது படும் போது அது நிறமாற்றத்தையும் முகத்தில் இருக்கும் கறைகளை போக்க செய்கிறது. இந்த சாறில் இருக்கும் கேடகோலேஸ் என்னும் நொதி ஆரோக்கியமான தோல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. உருளைக்கிழங்கு சாறு சருமத்தின் கறைகளை நீக்கி பளிச் என்று வைக்க செய்கிறது.
- முகத்தில் சோர்வும், மந்தமான கரும்புள்ளிகளும் இருக்கும் போது அதை நீக்க தேன் உதவக்கூடும். தேன் சருமத்துக்கு ஈரப்பதமூட்டும். முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை தடுக்கிறது.
- டீ ட்ரீ ஆயில் இயற்கையாகவே இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, சாலிசிலிக் போன்றவை முகப்பருவுக்கு சிகிச்சை அளிக்கவும், முகத்தின் நிறத்தை மேம்படுத்தவும் செய்கிறது. சூரியனிடமிருந்து வரும் சரும சேதத்தை தடுக்க செய்கிறது. டீட்ரீ ஆயில் பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமை உண்டாக்குகிறதா என்பதை பரிசோதிப்பது நல்லது.