முகத்தில் உள்ள கரும்புள்ளியை நிரந்தரமாக நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- எலுமிச்சை- 1
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் இதை முகத்தில் கருமையான திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.
இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்கும்.
2. தேவையான பொருட்கள்
- பால்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் காய்ச்சாத பாலை முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தினமும் 2 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக மறைய தொடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |