பட்டப்பகலில் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி: தடை விதிக்கப்படும் என உள்விவகார செயலர் சபதம்
பர்மிங்காம் பகுதியில் 11 வயது சிறுமி உட்பட மூவரை கொடூரமாக தாக்கிய ஆபத்தான XL bully நாய்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்விவகார செயலர் சுவெல்லா பிரேவர்மேன் உறுதி அளித்துள்ளார்.
சுவெல்லா பிரேவர்மேன் முடிவு
பிரித்தானியாவில் XL bully நாய்களின் இனப்பெருக்கம் மற்றும் விற்பனையை தடை செய்ய சுவெல்லா பிரேவர்மேன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 முதல் மூன்று சிறார்கள் உட்பட 9 இறப்புகளுக்கு இந்த bully நாய்கள் காரணமாக அமைந்துள்ளது.
Credit: TikTok
நமது சமூகத்தில் அந்த வகை நாய்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறார்களுக்கு ஆச்சுறுத்தலாக உள்ளது, இது கண்டிப்பாக முடிவுக்கு வரவேண்டும் என்றார் சுவெல்லா பிரேவர்மேன்.
XL bully நாய்கள் உண்மையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை, நாட்டில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். XL bully நாய்களை தடை செய்யும் பொருட்டு உரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே கொந்தளிப்பு
XL bully உட்பட்ட American bullys நாய்களால் 2022ல் 73 சதவீத நாய்கள் தொடர்பான மரணம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், மற்ற இனங்களை விட பிரித்தானிய மக்கள் American bullys நாய்களால் கொல்லப்படுவதற்கான வாய்ப்பு 270 மடங்கு அதிகம் என்றே ஆய்வில் தெரியவந்துள்ளது.
Credit: TikTok
சனிக்கிழமை 11 வயது சிறுமி ஒருவரை XL bully நாய் ஒன்று தாக்குவது காணொளியாக வெளியாகி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. XL bully என்பது இருவேறு நாய்களின் கலப்பினமாகும்.
இதன் முக்கியமான இனம் American pit bull terrier ஆகும். 1991ல் இருந்தே பிரித்தானியாவில் இந்த இனம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக கலப்பின நாய்களை உருவாக்குகின்றனர்.
Credit: Alamy
கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 22,000 நாய் தாக்குதல்களால் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது, 2018ல் இந்த எண்ணிக்கை 16,000 என பதிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |