மைனஸ் 15 டிகிரி குளிரில் வெட்டவெளியில் பிரசவித்த வீடற்ற பெண்! தக்க சமயத்தில் உதவிய பொலிஸ்
ஜேர்மனியில் சாலையோரம் வாழும் ஒரு இளம் பெண் உறையவைக்கும் பனிக்கு மத்தியில் பிரசவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது -15 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உள்ளது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பவேரிய மாநிலத்தில் உள்ள Nuremberg நகரத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு ரெயில் சுரங்கப்பாதையில் 20 வயது மிக்க ஒரு பெண் புதிதாக பிறந்த தன்னுடைய குழந்தையுடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.
வீடற்ற அந்த இளம் பெண் -15 டிகிரி செல்ஸியஸ் குளிருக்கு மத்தியில் வெட்டவெளியில் பிரசவித்துள்ளார் என தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
அவருடன் மற்றோரு பெண்ணும் துணைக்கு இருந்துள்ளார். அவர் தாயையும் குழந்தையையும் ஒரு Sleeping Bag-க்குள் வைத்து வெப்பமூட்ட முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் ஒரு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு உதவியுள்ளனர்.