கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்.., இந்த ஒரு இலை போதும்
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- நெல்லிக்காய்- 5
- வெந்தயம்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இருப்பு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
பின் இதில் உலரவைத்த கறிவேப்பிலை, நெல்லிக்காய், வெந்தயம் சேர்த்து குறைந்த தீயில் மெதுவாக கொதிக்க வைக்கவும்.
ஈரப்பதம் அனைத்தும் நீங்கியதும், எண்ணெய் நன்கு நிறம் மாறி வரும்.
பின் இந்த எண்ணெயை மூடி போட்டு ஒரு நாள் முழுக்க அப்படியே மூடி வைக்கவும்.
மறுநாள், எண்ணெயை ஒரு கண்ணாடி ஜாடியில் வடிகட்டி, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தவும்.
இந்த கறிவேப்பிலை எண்ணெயை தொடர்ந்து முடிக்கு பயன்படுத்திவர முடி நன்கு அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |