வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானம்.., எப்படி தயாரிப்பது?
நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 2 டம்ளர்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கருவேப்பிலை- 2 கொத்து
- இஞ்சி- சிறிதளவு
- இலவங்கப்பட்டை- சிறிதளவு
தயாரிக்கும் முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை சேர்த்து அதில் வெந்தயத்தை சேர்க்கவும்.
பின் அதில் கறிவேப்பிலையை நன்றாக கழுவி தண்ணீரில் சேர்க்கவும்.
அடுத்து இஞ்சியை நன்றாக இடித்து அதில் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் அதில் இலவங்கப்பட்டை இடித்து சேர்த்து இதை 3 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு லேசாக அதை ஆறவிட்டு வடிகட்டி குடிக்கவும்.
இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர நீரிழிவு நோய் வரமால் தடுக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |