எப்போதும் முகம் பளிச்சென்று இருக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், எப்போதும் முகம் பளிச்சென்று இருக்க உதவு பேஸ்பேக்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 சிட்டிகை
- கடலை மாவு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
2. தேவையான பொருட்கள்
- தேன்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |