சரும நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், சரும நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு- 1
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தேனை எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து முகத்தை வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர சரும நிறத்தை மேம்படுத்த உதவும்.
2. தேவையான பொருட்கள்
- தயிர்- 1 ஸ்பூன்
- கற்றாழை- சிறிதளவு
- ஆரஞ்சு- 1
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்யும் மற்றும் சருமத்தை சுத்தம் செய்யும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |