நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
என்ன தான் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று சருமத்தை பாதுக்காத்தாலும் இயற்கையான முறையில் செய்வது போன்று வருவது இல்லை.
இயற்கையான முறையில் செய்தால் மட்டுமே உங்களுடைய சருமமும் எப்போதும் இயற்கை தன்மையுடன் இருக்கும்.
அதற்கு நீங்கள் பெரியளவில் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. மஞ்சள், கடலை மாவு, பச்சைப் பயறு போன்ற பொருட்களை வைத்தும் முகத்தை பளிச்சிட செய்யலாம்.
அந்தவகையில் மஞ்சளும் நெய்யும் வைத்து எப்படி நிலா போன்ற பொலிவான சருமத்தை பெறலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
நெய் - அரை டீஸ்பூன்
- மஞ்சள் - 1 டீஸ்பூன்
- வேப்பிலை - சிறிதளவு
செய்முறை
- முதலில் வேப்பிலையை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும்.
- பின் அதில் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அடுத்ததாக அந்த கலவையில் அரை டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்துக் கொண்டால் நெய் மஞ்சள் பேஸ் கிரீம் தயார்.
இதை எப்படி பயன்படுத்தலாம்?
- இதை உங்கள் முகத்தில் பூசி மசாஜ் செய்யவும்.
- 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
- குறித்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |