கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அற்புத எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில் அடர்த்தியாகவும், நீளமாகவும் முடி வளர உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆமணக்கு எண்ணெய்- 3 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
- பூண்டு- 7 பல்
- நெல்லிக்காய்- 3
- சிறிய வெங்காயம்- 3
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த எண்ணெயில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து இவை அனைத்தையும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இறுதியாக அடுப்பை அனைத்து இந்த எண்ணெய்யை குளிர விட்டு தலைமுடியில் உச்சந்தலை முதல் நுனி வரை தேய்க்க வேண்டும்.
இப்போது இந்த எண்ணெயை இரவும் தூங்குவதற்கு முன் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
மறுநாள் காலையில் தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தலைமுடியில் ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |