இந்த பொடியை சாதத்தில் கலந்து ஓர் உருண்டை சாப்பிடுங்க.. குடல் புழுக்கள் காணமால் போய்விடும்!
பொதுவாக குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும்.
குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.
குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும்.
தொல்லை கொடுக்கு இந்த குடல் புழுவை விரட்ட இயற்கை வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவை
- வால் மிளகு - 1 டீஸ்பூன் பொடி
- சீரகம் - அரை டீஸ்பூன்
- சுண்டை வற்றல் - அரை டீஸ்பூன்
- மணத்தக்காளி வற்றல் - கால் டீஸ்பூன்
- நிலவாகைச்சூரணம் - கால் டீஸ்பூன்
செய்முறை
அனைத்தையும் ஒன்றாக்கி மைய அரைத்து பொடியாக்கவும். இந்த பொடியை கண்ணாடி பாட்டிலில்சேர்த்து வைத்துகொள்ளவும். உணவின் போது சாதத்துடன் இந்த பொடியை கலந்து சிறிது உப்பு, இலேசாக விளக்கெண்ணெய் கலந்து ஒரு கவளம் சாப்பிட வேண்டும்.
இரண்டு நாள் தினமும் மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும்.
வயிற்றுபூச்சிகள் அதிகம் இருந்தால் தினமும் இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் பொடியில் தேன் குழைத்து எடுத்துகொண்டால் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும்.
தொடர்ந்து மூன்று நாட்கள் என 15 நாட்கள் இடைவெளியிலும் ஒரு மாத இடைவெளியிலும் பிறகு படிப்படியாக மூன்று மாத இடைவெளியிலும் எடுத்துவந்தால் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும்.
குறிப்பு
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது விளக்கெண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டாம். அதற்கு மாற்றாக நெய் கலந்து சில துளி விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கலாம். அதிக குளிர்ச்சி உள்ள பெரியவர்களும் விளக்கெண்ணெய் சேர்க்காமல் பாதி நெய் பாதி நல்லெண்ணெய் கலந்து சாப்பிடலாம்.