முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் மூலிகை ஷாம்பு: எப்படி தயாரிப்பது?
கடைகளில் விற்கப்படும் ஷாம்பூக்களில் அதிகளவு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடிஉதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இரசாயனங்கள் அற்ற இயற்கை முறையிலான ஷாம்பூவை பயன்படுத்தினால் மட்டுமே முடி உதிர்வு, பொடுகு பிரச்சனைகளில் இருந்து நம் முடி ஆரோக்கியமாக வளரும்.
அந்தவகையில், வீட்டிலேயே தலைமுடி அடர்த்தியாக வளர மூலிகை ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- ஆவாரம் பூ பவுடர்- 2 ஸ்பூன்
- வெண்ணெய்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- தேவையான அளவு
பயன்படுத்தும் முறை
முதலில் ஆவாரம் பூ பவுடரை தண்ணீரில் கலந்து ஒரு மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும்.
பின் இதில் வெண்ணெய் மற்றும் தேனை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை ஈரமான முடியில் பூசி, 20 நிமிடங்கள் விட்டுவிட்டு தண்ணீரால் கழுவவும்.
இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
2. தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
- செம்பருத்தி பவுடர்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் கற்றாழை ஜெல், செம்பருத்தி பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலக்கவும்.
பின் இந்த கலவையை முடியில் பூசி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண தண்ணீரால் கழுவவும்.
இந்த கலவையை பயன்படுத்தினால் முடியின் வேர்களை பலப்படுத்தி முடி உதிர்வதை குறைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |