முகத்தை உடனடியாக வெள்ளையாக்க உதவும் கொரியன் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், கொரிய பெண்களை போல முகம் பொலிவாக இருக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- அரிசி தண்ணீர்- 5 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி தண்ணீரை எடுத்து, அதனுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சருமத்தை பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்கு நுரைக்க அடித்துக்கொள்ளவேண்டும்.
பின் இதில், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இதை முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்திவருவதால் சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |