வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானம்.., எப்படி தயாரிப்பது?
உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
அந்தவகையில், வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.'
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 2 கப்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- இஞ்சி- சிறிதளவு
- இலவங்கப்பட்டை- சிறிதளவு
எப்படி தயாரிப்பது?
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவைக்கவும்.
பின் அதில் வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை நன்றாக இடித்த அதில் சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின்னர் அதில் இலவங்கப்பட்டை இடித்து சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பானம் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து இதனை வடிகட்டவும்.
இந்த பானத்தை தினமும் தொடர்ந்து குடித்து வர சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |