உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேப்பிலை பொடி- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் வேப்ப இலைகளை வெயிலில் நினைக்க காயவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் வேப்பிலை பொடி, தயிர், வைட்டமின் ஈ காப்ஸ்யூல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும்.

பின் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி உலரவிட்டு இந்த பேஸ்பேக்கை முகத்தில் தடவவும்.
இதற்கடுத்து இதனை முகத்தில் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் வெள்ளையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |