முகப்பொலிவை உடனடியாக அதிகரிக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
அந்தவகையில், முகப்பொலிவை உடனடியாக அதிகரிக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தயிர்- 1 ஸ்பூன்
- மஞ்சள்- ½ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும்தயிரை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சரும பொலிவு அதிகரிக்கும் மற்றும் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- எலுமிச்சை- 1
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேனை எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி முகத்தில் பொலிவைத் தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |