வெள்ளைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை டை.., எப்படி தயாரிப்பது?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை டையை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மருதாணி தூள்- 2 ஸ்பூன்
- காபி தூள்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் நீரை கொதிக்கவைத்து அதில் காபித் தூளைச் சேர்த்து சில நிமிடம் கொதிக்க வைத்து அதனை ஆறவைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள், தயிர் மற்றும் காபி நீர் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
அடுத்து இதை தலைமுடி முழுவதும் தடவி 2 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும்.
இறுதியாக லேசான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் தூள்- 1 ஸ்பூன்
- மேத்தி தூள்- 1 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய்- 5 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கடாயில், ஆலிவ் எண்ணெயை சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் சூடாக்கவும்.
பின் இதில் நெல்லிக்காய் தூள், மேத்தி தூள் சேர்த்து நன்கு கிளறி இதனை ஆறவைக்கவும்.
அடுத்து இந்த கலவையை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றவும்.
இதை தலைமுடி முழுவதும் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் மென்மையான ஷாம்பு கொண்டு கழுவிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி மறைந்து நிரந்தரமாக கருப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |