இந்த 4 பொருள் போதும்.., நரைமுடியை கருப்பாக்க இயற்கை டை தயாரிக்கலாம்
அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை டையை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஹென்னா பவுடர்- 4 ஸ்பூன்
- இண்டிகோ பவுடர்- 4 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 1 ஸ்பூன்
- காபி தூள் - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் மருதாணிப் பொடி, இண்டிகோ பவுடர், நெல்லிக்காய் பொடி, காபி தூளை வெந்நீரில் கலந்து பேஸ்ட் செய்துக்கொள்ளவும்.
பின்னர் அதை 4-6 மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைக்கவும்.
இதற்குப்பிறகு, தலைமுடியில் மருதாணி பேஸ்ட் தடவி 2 மணி நேரத்திற்கு அப்படி வைக்கவும்.
அடுத்ததாக தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு கழுவிக்கொள்ளலாம்.
இயற்கையாகவே கருமையான கூந்தலுக்கு மாதத்திற்கு ஒரு முறை இதைப் பயன்படுத்துங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |