நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரைமுடி.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
- மருதாணி- 2 ஸ்பூன்
- அவுரி இலை- 1 ஸ்பூன்
- வெள்ளை கரிசலாங்கண்ணி - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலில் மருதாணி, அவுரி இலை மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணியை மிதமான தீயில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் இதில் அரைத்து பொடியை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கொதித்து நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து இதனை நன்கு ஆறவைக்கவும்.
இறுதியாக இந்த எண்ணெயை வடிகட்டி தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவி மசாஜ் செய்யவும்.
இந்த எண்ணெயை தொடர்ந்து கூந்தலுக்கு பயன்படுத்திவர நரைமுடியை முற்றிலும் மறைந்து கூந்தல் கருப்பாக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |