இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக்கும் மூலிகை எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- மருதாணி- 1 கைப்புடி
- அவுரி இலை - 1 கைப்புடி
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலில் மிதமான தீயில் அவுரி இலை, மருதாணியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடானதும் அரைத்து பொடியை சேர்க்கவும்.
எண்ணெய் நன்கு கொதித்து நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து இதனை ஆறவைக்கவும்.
இறுதியாக இந்த எண்ணெயை வடிகட்டி தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்யவும்.
பின் ஒரு மணி நரம் கழித்து கூந்தலை மென்மையான ஷாம்பு பயன்படுத்தி அலசிக்கொள்ளலாம்.
இந்த இயற்கை எண்ணெயை தொடர்ந்து கூந்தலுக்கு பயன்படுத்திவர நரைமுடி மறைந்து கருப்பாக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |