அதிவேகமாக முடி வளர உதவும் ஆயுர்வேத எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் ஆயுர்வேத எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
- செம்பருத்தி பூ- 10 பூ
- செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி
- வேப்பிலை- ஒரு கைப்பிடி
- மருதாணி இலை- ஒரு கைப்பிடி
- சின்ன வெங்காயம்- 5
- கற்றாழை- ஒரு கப்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- பெரிய நெல்லிக்காய்- 3
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
- வெட்டிவேர்- ஒரு கைப்பிடி
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் நன்கு காயவிடவும்.
பின் அதில் கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, இடித்த வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் சேர்க்க வேண்டும்.
அடுத்து கொதிக்கின்ற எண்ணெயில் கற்றாழையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும்.

பின்னர் இதனுடன் கருஞ்சீரகம், வெட்டி வேர் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் நன்கு கொதித்து நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து ஒருநாள் முழுவதும் அபப்டியே வைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
இந்த ஆயுர்வேத எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |