கூந்தலின் நீளத்தை அதிகரிக்க தேங்காய் எண்ணெய்+ கருஞ்சீரகம்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், கூந்தலின் நீளத்தை அதிகரிக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் கருஞ்சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.
இதற்கடுத்து அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பின்னர் எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெயை ஆறவைக்கவும்.
இதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி தலைமுடியின் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இறுதியாக மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |