முடி உதிர்வை நிறுத்தி நீளமான கூந்தலை பெற உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி வேகமாக முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- புதினா இலை- 10
- தேங்காய் எண்ணெய்- ஒரு கப்
- கருஞ்சீரகம்- ஒரு ஸ்பூன்
- வெந்தயம்- ஒரு ஸ்பூன்
- ஆமணக்கு எண்ணெய்- ஒரு கப்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அரைத்த கற்றாழை ஜெல் பேஸ்டுடன் புதினா இலைகளை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த கற்றாழை கலவை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் நன்கு கலக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் 20 நிமிடம் நன்கு கலக்கவும். அதன் மேல் வரும் நுரையை கரண்டியால் பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து எண்ணெயில் கருஞ்சீரகம், வெந்தயம் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்துக்கொள்ளவும்.
பின்னர் எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி பின் அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தலையில் தேய்த்து ஊற விட்டு பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முடி நீளமாகவும் நன்கு அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |