தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் நினைப்பார்கள்.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் தங்கம் போல் ஜொலிக்க ஆரஞ்சு தோலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு தோல் - 1
- முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
- பால்- தேவையான அளவு
பயன்படுத்தும் முறை
முதலில் ஆரஞ்சு தோலை நன்கு வெயிலில் காயவைத்து பொடிசெய்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு தோல் பொடி, முல்தானி மிட்டி மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
பின் இவற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு தோல்- 1
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஆரஞ்சு தோலை நன்கு வெயிலில் காயவைத்து பொடிசெய்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
அடுத்து, இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் விட்டுவிட்டு தண்ணீரால் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |