முகத்தில் உள்ள கரும்புள்ளியை நிரந்தரமாக நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
அந்தவகையில் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- ஓட்ஸ்- 1 ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ், தேன் மற்றும் பால் சேர்த்து, நன்கு கலக்கவும்.
இந்த பேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தடவி, விரல் நுனியில் 30 வினாடிகள் நன்கு மசாஜ் செய்யவும்.
பின்னர் 10 நிமிடம் அப்படியே விட்டு விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- தேன்- 1 ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் தேன், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் முகத்தில் தடவி மசாஜ் செய்து15 நிமிடம் அப்படியே விட்டு விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |