புதிய பிரீமியம் பைக்குகள், மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யும் ஹோண்டா
Honda நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் 2 முதல் 3 புதிய பிரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ஹோண்டாவின் விற்பனை பெரும்பாலும் 110cc-125cc கம்யூட்டர் பைக்குகளிலேயே உள்ளது.
ஆனால், அதிக சக்தி கொண்ட 200cc மேற்பட்ட பிரீமியம் பைக்குகள் சந்தையில் அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா தனது பங்கு வலுப்படுத்த முயற்சி செய்கிறது.

FY26-இல் ஹோண்டா 3.16 மில்லியன் ஸ்கூட்டர்கள் மற்றும் 2.59 மில்லியன் மோட்டார் சைக்கிள்களை விற்றுள்ளது. அதில் 81 சதவீத விற்பனை கம்யூட்டர் பைக்குகளிலிருந்து வந்துள்ளது.
“இந்தியாவில் GDP உயர்வு, வருமானம் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய தயாரிப்புகளின் தாக்கம் காரணமாக வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மாறுகின்றன. அதற்கேற்ப நாங்கள் உள்ளூர் உற்பத்தி மற்றும் Make in India திட்டத்தின் கீழ் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துகிறோம்.” என HMSI தலைவர் Tsutsumu Otani கூறியுள்ளார்.
ஹோண்டா, ராஜஸ்தானின் Tapukara மற்றும் குஜராத்தின் Vithalapur தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 6.5 லட்சம் யூனிட்கள் கூடுதல் உற்பத்தி திறனை உருவாக்குகிறது. FY28-க்குள் மொத்த உற்பத்தி திறன் 8 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கும்.
மின்சார வாகன துறையில், ஹோண்டா புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது. ஆனால், சார்ஜிங் வசதிகள் விரிவடையும் வரை, மின்சார வாகனங்களை படிப்படியாக அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |