இந்தியாவில் வாழும் ஒருவருக்கு பிளாட்டினம் ஜூபிலியின்போது பிரித்தானிய மகாராணியார் அளித்துள்ள கௌரவம்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரு பிரித்தானியர், பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலிக் கொண்டாட்டங்களின்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் வாழும் Christopher Bowden என்னும் பிரித்தானியர், அழிவின் விளிம்பிலிருக்கும் கழுகுகளைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தெற்காசியா முழுவதிலும் அவற்றைப் பாதுகாப்பதற்காக Christopher Bowden கடுமையாக உழைத்துள்ளார். அதன் விளைவாக, சமீபத்தில் கழுகு ஒன்று குஞ்சு பொறித்துள்ள விடயம் இயற்கை ஆர்வலர்களுக்கும் வனத்துறையினருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்தியாவில் வாழும் Christopher Bowdenஇன் கடுமையான உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலிக் கொண்டாட்டங்களின்போது வழங்கப்படும் Order of the British Empire என்னும் உயரிய விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பெங்களூருவிலும் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.