லண்டன் சாலையில் ரத்தம் சொட்ட பாய்ந்த குதிரைகள்... விளக்கமளித்த பிரித்தானிய இராணுவம்
மத்திய லண்டனில் ரத்தம் சொட்ட கட்டுப்பாடின்றி பாய்ந்த குதிரைகள் தொடர்பில் பிரித்தானிய ராணுவம் தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய குதிரைகள்
நாட்டின் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்திய குதிரைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கால்நடை மருத்துவர்களின் கவனிப்பில் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
பெல்கிரேவியா பகுதியில் குதிரைப்படையை சேர்ந்த 7 குதிரைகள் மற்றும் 6 ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் கான்கிரீட்டை கொட்டியுள்ளனர்.
இது குதிரைகளை அச்சமூட்டியுள்ளது. அத்துடன் 4 வீரர்களை கீழே தள்ளியுள்ளது. 5 குதிரகள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து தப்பியதுடன், வாகனங்களில் மோதி, பலருக்கும் காயம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
5 குதிரைகளும் மீட்கப்பட்டுள்ளது
பரபரப்பான சாலையில் கட்டுப்பாடின்றி அந்த குதிரைகள் பாய்ந்துள்ளது. இறுதியில் 5 குதிரைகளும் மீட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து லெப்டினன்ட் கர்னல் மாட் உட்வார்ட் என்பவரும் சமூக ஊடக பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
காயமுற்ற வீரர்களும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |