மாஸ்க்கை துவைக்காமல் ரொம்ப நாள் பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு வரும்? எச்சரிக்கை தகவல்
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாட்களில் முதலிருந்து முகக்கவசம் எனப்படும் மாஸ்க் அணிவது தான் ஒரு உயிர் காக்கும் கருவியாக இருந்து வருகிறது.
மாஸ்க் அணிவதோடு சமூக விலகலை மேற்கொள்வது, கைகளை அடிக்கடி கழுவிக் கொள்வது அல்லது சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை செய்யுமாறு மருத்துவர்கள் அடிக்கடி அறிவுறுத்துகின்றனர்.
இருப்பினும் நம்மில் சிலர் அணியும் மாஸ்க்கை சுத்தமாக துவைக்காமல் அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார்கள். இதன் காரணமாக பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் மாஸ்க்கை துவைக்காமல் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- முகத்தில் ஏற்படும் தோல் ஒவ்வாமை மற்றும் தோல் அரிப்பு போன்றவை எரிச்சலுக்கு ஆளாக்கும்.
- தோல் சிவந்து போதல் மற்றும் தோல் எரிச்சலுக்கு வழிவகுக்கும். மேலும், முகக் கவசம் அணிவதால் அந்த குறிப்பிட்டப் பகுதியில் சருமம் அதிக வியர்வையை வெளிப்படுத்தும். அவை, சரும துளைகளை அடைத்து முகப்பருவுக்கு வழிவகுக்கிறது.
- சுகாதாரமற்ற துவைக்காத முகக் கவசங்கள் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு பங்களிக்கும். ஆனாலும், இது உண்மையா என்று அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு ஆய்வும் சொல்லவில்லை.
இதனை தடுக்க என்ன செய்யலாம்?
- நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி விட்டு பின்னர் அதனை தூக்கி எறியக்கூடிய சர்ஜிக்கல் மாஸ்க்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அதேபோல் உங்களது சருமம் சென்சிட்டிவாக சருமமாக இருந்தால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பருத்தியால் ஆன மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
குறிப்பு
- நீங்கள் ஒரு முறை பயன்படுத்திய மாஸ்க்கை துவைக்காமல் மீண்டும் ,மீண்டும் அணியக் கூடாது.
- அதனை நன்கு துவைத்து சுடுநீரில் அலசி, வெயிலில் காய வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.