கொரோனா நோயாளிகளை அச்சுறுத்தும் Mucormycosis! அறிகுறிகள் என்ன?
இந்தியாவில் கொரோனா தொற்று அதிரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் புதிதாக “மியூகோமிகோசிஸ் ” என்ற நோயும் கொரோனா தொற்று நோயாளிகளிடம் வேகமாக பரவி கொண்டு வருவதாக தகவல் வெளியாகியு்ளளது.
கொரோனா தொற்று நோயாளிகளை பாதிக்கும் பிளாக் பங்கஸ் கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகின்றது.
அது இந்தியாவில் பல இடங்களில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இது பல சிக்கல்களை ஏற்படுத்துவாக கூறப்படுகின்றது.
இதுவரை 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இந்த கறுப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் என்ன? இது யாரை அதிகம் தாக்குகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மியூகோமிகோசிஸ் என்றால் என்ன?
மியூகோமிகோசிஸ் என்பது பூஞ்சையால் ஏற்படும் தொற்று ஆகும். நமது சூழலில் நம்மை சுற்றி பூஞ்சைகளை உற்பத்தி செய்யும். துகள்கள் நிறைந்து இருக்கின்றன. ரொட்டிகள் போன்ற உணவு பொருள்கள் இந்த பூஞ்சைகளை உண்டாக்குகின்றன.
எல்லோருக்கும் உடலில் அவை தொற்றை உண்டாக்குவதில்லை. ஏனெனில் உடலில் இருக்கும் எதிர்ப்பு ஆற்றல் இதை உள்ளே விடுவதில்லை. மியூகோமிகோசிஸ் இப்போது பெரிய கடுமையான அச்சுறுத்தலாக சொல்லப்படுகிறது.
இதன் அறிகுறிகள் என்ன?
- மூக்கடைப்பு மூக்கின் வழியே கறுப்பாகவோ, ரத்தமாகவோ திரவம் வெளியேறுவது, கன்ன எலும்புகளில் வலி உண்டாவது போன்றவை மியூகோர்மைசிஸ் நோய்க்கான முதன்மை அறிகுறி.
- உணர்வின்மை, வீக்கம் போன்றவையும் இதன் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு மூக்கிற்கும், மேல்வாய்க்கும் இடைப்பட்ட பகுதி கறுப்பாக மாறும். சிலருக்கு பல் வலி அதிகமாக இருக்கும். மங்கலாக இரட்டையாக தெரிவது, காய்ச்சல் போன்ற நிலையும் உண்டாகும். மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிடவையும் கூட இதன் அறிகுறிதான்.
- மியூகோர்மைசிஸ் நோயாளிகள் பூஞ்சை அச்சுகள் பாதிப்பை எதிர்கொள்ளும் போது சைனஸ் குழிகள் மற்றும் நரம்புகளை தாக்கும் போது பூஞ்சை தொற்று தீங்கை உண்டாக்கும். இது ஒரு நபருக்கு தொடர்ச்சியான வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை உண்டாக்க செய்யும்.
- இந்த கறுப்பு பூஞ்சை பார்வை குறைபாட்டையும் உண்டாக்கி விடும். சிலர் ஒரு கண்ணில் ஒரு வித வீக்கத்தை அனுபவிக்கலாம். இதனால் மங்கலான பார்வை இருக்கலாம். சிலருக்கு கண்கள் ரத்த கண்களாக உருவாக்கலாம்.
- வீக்கம், கன்னத்தில் இருக்கும் எலும்புகள் உள்ளூர வலி, ஒரு பக்க முகத்தில் வலி அல்லது உணர்வின்மை போன்றவை தொற்று நோய்க்கான முதன்மை அறிகுறியாக இருக்கலாம்.
- மனச்சோர்வு , நினைவாற்றல், இழப்பு, நரம்பியல் குறைபாடு போன்ற முக்கியமான அறிகுறிகள் மாற்றப்பட்ட மன நிலை நோயாளிக்கு கவனம் தேவை என்பதற்கான முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம்.
- கண்கள், முக்கை சுற்றி கருப்பு திட்டுக்களின் வளர்ச்சியை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில் பூஞ்சை தொற்றுநோய்களின் வளர்ச்சியானது நபரின் பற்கள் அல்லது தாடைகளை இழக்க வழிவகுக்கும்.
யாரை அதிகமாக பாதிக்கிறது ?
- இந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த நிலையில் இருப்பவர்கள் தான் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். கேன்சர், ஹெச் ஐவி பாதிப்புகளுக்கு தீவிர சிகிச்சை எடுப்பவர்களை இது தாக்குகிறது .
- கொரோனா தொற்று தீவிரமாகும் போது பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. சாதாரண அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு இந்த கறுப்பு பூஞ்சை தொற்று உண்டாகும் வாய்ப்பு மிகவும் குறைவும்.
- கொரோனா தொற்று இல்லாமல் மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்களுக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைப்பதற்கான மருந்துகளை எடுத்துகொள்பவர்களையும் பூஞ்சை தாக்குகிறது.