மகாராணியுடன் சண்டை போட்டு வாக்குவாதம் செய்த மன்னர் சார்லஸ்! முதல் மனைவி டயானாவுக்காக... கசிந்த தகவல்
டயானாவின் உடலை பிரித்தானியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ராணியுடன் வாக்குவாதம் செய்த சார்லஸ்.
இளவரசி டயானாவின் நண்பர் ரிச்சர்ட் கே வெளியிட்டுள்ள தகவல்கள்.
பிரித்தானிய இளவரசி டயானா பிரான்ஸில் இறந்த போது அவர் சடலத்தை சொந்த நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக ராணியுடன், தற்போதைய மன்னர் சார்லஸ் எப்படி வாக்குவாதம் செய்து சண்டை போட்டார் என தெரியவந்துள்ளது.
மகாராணியார் மறைவிற்கு பிறகு சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். சார்லஸின் முதல் மனைவி டயானா. இருவருக்கும் 1981ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1996ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதற்கு அடுத்த ஆண்டு 1997ல் பிரான்ஸின் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். அப்போது டயானாவின் சடலத்தை பிரித்தானியாவுக்கு கொண்டு வர எப்படி ராணியாருடன் சார்லஸ் போராடினார் என்பது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை டயானாவின் நண்பர் ரிச்சர்ட் கே வெளியிட்டுள்ளார்.
Daniel Leal/AFP/Getty
அதன்படி அரச விமானம் மூலம் பாரீஸுக்கு பயணித்து டயானாவின் சடலத்தை கொண்டு வர சார்லஸ் விரும்பினார். ஆனால் இதற்கு ராணி எலிசபெத் உடன்படவில்லை, இருப்பினும் தனது தாயாருடன் வாக்குவாதம் செய்து சம்மதத்தை பெற முயன்றார் சார்லஸ். இதையடுத்து ராணியார் ஒப்பு கொண்டிருக்கிறார்.
அதாவது டயானாவுக்காக சண்டை போட்டு தாயாருடன் அவர் போராடியதாக ரிச்சர்ட் கூறினார். பின்னர் டயானாவின் உடல் அரச விமானத்தில் அவர் இறந்து 16 மணி நேரம் கழித்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்பிறகு கின்சிங்டன் அரண்மனையில் வைக்கப்பட்டது.
டயானா உயிரிழந்த நிலைகுலைய வைக்கும் செய்தியை அவரின் மகன்களான வில்லியம், ஹரியிடம் பக்குவமாக சார்லஸ் சொல்லியிருக்கிறார். தனது முன்னாள் மனைவி டயானாவின் மரணம் சார்லஸை உலுக்கியது, அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார், ஏனெனில் அந்தளவுக்கு அவரை சார்லஸ் நேசித்தார்.
WPA Pool / Getty