கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் எத்தனை நாளில் குணமாகும்? தெரியவந்த தகவல்
கொரோனாவினால் பாதிக்கப்படும் குழந்தைகள் ஆறு நாட்களில் குண்மடைந்துவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகள் தற்போது கொரோனாவின் 3-வது அலையில் உள்ளது. இந்த மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக எச்ஸ்ரீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகளுக்கான கொரோனா பாதிப்பு தொடர்பாக தி லான்செட் சைல்டு அண்ட் அடல்சன்ட் பத்திரிகையில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
அதில், பிரித்தானியாவில் ஸோ கோவிட் ஸ்டடி ஸ்மார்ட் போன் செயலி மூலம், 5-17 வயது சிறுவர், சிறுமிகள் 25 ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகள் நீண்ட காலம் கொரோனா அறிகுறியுடன் இருப்பது மிகவும் குறைவு என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒரு சில குழந்தைகள் மட்டுமே, நீண்ட கால பாதிப்புகளை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் எம்மா டுங்கன் தெரிவித்துள்ளார்.
பெரியவர்கள் தான் கொரோனாவினால் அதிக பாதிப்பை அனுபவிக்கின்றனர். இவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு 4 வாரங்களோ அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அது குழந்தைகள் என்று பார்த்தால், சராசரியாக 6 நாளில் கொரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நோயின் முதல் வாரத்தில் சராசரியாக 3 அறிகுறிகள் அவர்களுக்கு இருந்தது. லேசான பாதிப்பையே அனுபவிக்கின்றனர். இவர்கள் 6 நாளில் குணம் அடைவார்கள். நீண்ட காலம் தொற்றால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் சோர்வு அடைகிறார்கள். 84 சதவீத குழந்தைகள், நோயின் ஒரு கட்டத்தில் சோர்வுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. த
லைவலி, வாசனை இழப்பு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள்.
கொரோனா வைரஸ் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபின்னர் கூட குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.