ஒரே இடத்தில் நின்று மாதம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டும் ஆட்டோ ஓட்டுநர் - எப்படி தெரியுமா?
ஓலா, ஊபர் போன்ற செயலிகள் வருகையால் தங்களது, வருமானம் குறைந்துள்ளதாக பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாதம் 8 லட்சம் வரை சம்பாதிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மாதம் ரூ.8 லட்சம்
Lenskart நிறுவனத்தின் உயரதிகாரியான ராகுல் ருபானி, இந்த தகவலை Linkedin தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் விசா நேர்முகதேர்வுக்காக மும்பையில் உள்ள அமெரிக்கா தூதரகத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த பாதுகாவலர் தூதரகத்திற்கு உள்ள எந்த ஒரு பேக்கையும் எடுத்து செல்ல கூடாது என கூறினார்.
அப்போது என்ன செய்வது என தெரியாமல் இருந்த என்னை, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அழைத்தார்.
உங்கள் பேக்கை நான் வைத்திருக்கிறேன். ஆனால், நீங்கள் எனக்கு ரூ.1000 தர வேண்டும் என கூறினார்.
முதலில் தயங்கிய நான் பின்னர் அவரிடம் எனது பேக்கை கொடுத்து சென்றேன். இது ஒரு நல்ல தொழிலாக தெரிந்தது.
ஒரு நாளைக்கு இதே போல், 20-30 பேரிடம் பைகளை பெற்று, நாளொன்றுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 சம்பாதிக்கிறார். அதுவே மாதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வருமானம் கிடைக்கிறது.
அவரால் 30 பேக்களை ஆட்டோவில் வைக்க முடியாது என்பதால், உள்ளூர் காவல் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்து லாக்கரில் பேக்களை வைத்துக்கொள்கிறார்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |