பிரித்தானியாவில் கொரோனாவின் 2-வது அலை எப்படி சமாளிக்கப்பட்டது? லண்டன் மருத்துவர் கொடுத்த விளக்கம்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரித்தானியாவில் இது போன்ற நிலையின் போது எப்படி சமாளிக்கப்பட்டது என்பது குறித்து லண்டனில் இருக்கும் மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறைந்தது நாள் ஒன்றிற்கு 2000 பேர் சமீப நாட்களில் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உலகநாடுகள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இருக்கும் பிரித்தானியாவில், இது போன்ற கொரோனாவின் 2-வது அலை வந்த போது, அங்கு எப்படி சமாளிக்கப்பட்டது என்பது குறித்து லண்டனில் இருக்கும் மருத்துவர் மூர்த்தி ஆறுமுகம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.
#நேர்படப்பேசு
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 5, 2021
பிரிட்டனில் கொரோனா 2ம் அலையை சமாளிக்க பொது முடக்கம், தடுப்பூசி, மக்களின் விழிப்புணர்வு போன்றவை கைகொடுத்தது - மூர்த்தி ஆறுமுகம் (மருத்துவர், லண்டன்)#Corona | #CoronaSecondWave | #CoronavirusIndia | #TNcoronavirus pic.twitter.com/eWe0fRHd8Z
அதில், பிரித்தானியாவில் 2-வது கொரோனா அலை வந்த பின்பு, இப்போது வரை நாங்கள் முழு ஊரடங்கில் தான் இருக்கிறோம். இரண்டாவது அலை பரவலுக்கு முன்பே இங்கு ஊரடங்கு போடப்பட்டது.
இதுவே முதல் அலையை விட, இரண்டாவது அலையை சமாளிக்க பெரிதும் உதவியது. குறிப்பாக, மக்களுக்கு அளிக்கபப்ட்ட விழிப்புணர்வும் காரணம், கொரோனா என்றால் என்ன? எப்போது நாம் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்? எப்போது நாம் நம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்? நம்மலால் என்ன செய்ய முடியும்? போன்ற விழிப்புணர்வு அதிகமாக இருந்தது.
அரசும் இதை நன்றாகவே செய்தனர். முகக்கவசம் இப்போது வரை நாங்கள் போட்டுக் கொண்டு தான் இருக்கிறோம், அதில் இருந்து இன்னும் பிரித்தானியா வெளியில் வரவில்லை.
அதே சமயம் ஒவ்வொரு படிப்படியாக ஊரடங்கு இங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதாவது ஊரடங்கு போட்டவுடன், உடனடியாக தடுப்பூசியை அவர்கள் கொண்டுவந்தார்கள். ஆரம்பத்தில் 85 வயதுடையவர்கள், அதன் பின் 75 வயதுடையவர்கள், 65 என இப்போது வரை தனக்கு தெரிந்து 70 சதவீத பெரியவர்கள் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
முதல் தடுப்பூசிக்கும், இரண்டாவது தடுப்பூசிக்கும் 4 வாரம் மட்டுமே இடைவெளி என்று ஆராய்ச்சியாளர்கள் சொன்ன போது, பிரித்தானியா அரசு ஒரு தைரியமான முடிவை, 10 முதல் 12 வாரங்களுக்குள் அனைவருக்கும் முதல் தடுப்பூசி போட்டு, பின் அதை செய்வோம் என்று நினைத்தனர்.
அதன் படி இரவு, பகலும் பாடுபட்டனர். குறிப்பாக விடுமுறை எடுக்காமல் அனைத்து இடங்களிலும், அதாவது பார்மஸி, விளையாட்டு இடங்கள், மருத்துவமனை என பல இடங்களில் அதற்கான தேவைகள் வைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம், மக்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்துள்ளது, இப்போது இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முதலில் ஊரடங்கு, இரண்டாவது தடுப்பூசி, மூன்றாவது பொதுமக்கள் அரசு கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், இவை எல்லாம் நல்ல படியாக நடந்தால், கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.