பாகற்காயை துளி கூட கசப்பே இல்லாமல் சமைக்க ஒரு வழி இருக்கு.. எப்படி தெரியுமா?
பாகற்காயில் இயற்கையாகவே கசப்பு தன்மை இருக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்காத காய்கறியாக பாகற்காய் மாறி உள்ளது.
ஆனால் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. பாகற்காய் சாறு தினமும் பருகுவதால் நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
இதில் உள்ள வேதி பொருள் இன்சுலினாக செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கின்றது. மேலும் இதில் நார் சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது.
சரி வாங்க பாகற்காயை கசப்பில்லாமல் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் செய்வது குறித்து பார்க்கலாம்.
கசப்பில்லாமல் சமைக்க வழிகள்:-
- முதலில் பாகற்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் உப்பு சேர்த்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் அவற்றை நன்கு அலசி தண்ணீர் விட்டு மீண்டும் அலசி எடுத்துக்கொள்ளவும். இப்போது சமைத்து ருசிக்கவும்.
- பாகற்காயை தயிர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலவையுடன் கலந்து ஊற வைத்து வறுக்கவும். குழந்தைகள் நிச்சயம் அதிகம் விரும்புவார்கள்.
- உப்பு, மஞ்சள், புளி மற்றும் நாட்டு சர்க்கரையின் கலவையை நறுக்கப்பட்ட கசப்பான பாகற்காய் மீது தடவவும். சில நிமிடங்கள் கழித்து கழுவி பின்னர் சமைக்கவும்.
- கசப்பான பாகற்காயை அப்படியே உட்கொள்ள விரும்பினால் அதில் பேரிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை சேர்த்து மிக்சியில் அரைத்து குடிக்கவும். தேவைப்பட்டால் தேன், வெல்லம் அல்லது இஞ்சி போன்றவற்றை சுவைக்கு சேர்த்து கொள்ளலாம்.
-
பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இருமல், வயிற்றுப் புழுக்கள் போன்றவை நீங்கும்.