வெறும் 7 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்போ தினமும் இதை ட்ரை பண்ணுங்க!
நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலருக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்பை ஏற்படும். சிலருக்கு சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால் தொப்பை வரும். இதுபோன்று எப்பேர்பட்ட தொப்பையாக இருந்தாலும் 7 நாட்களில் உங்களின் தொப்பையை கரைக்க கூடிய குடீநீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுடு தண்ணீர் – 1டம்ளர்
பட்டை – 2துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை பழம் – 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு டம்ளரில் நன்று சூடாக தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் பட்டையை பொடி செய்து அதில் அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக இஞ்சியை தட்டி தண்ணீரில் சேர்க்கவும்.
பின்னர் எலுமிச்சை பழத்தை தோலுடன் சேர்த்து கொள்ளவும். இதை 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து வடிகட்டி தேன் சேர்த்து பருகலாம். இதே போன்று 7 நாட்கள் செய்து வந்தால் உங்களின் கொழு கொழு தொப்பை காணாமல் போய்விடும்.
பயன்கள்:
இதனை காலையில் வெறும் வயிற்றில் காபிக்கு பதிலாக இதை குடிப்பதால் நல்ல பயனை கொடுக்கும்.
இதனை குடிப்பதால் தொப்பை மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இது உதவி செய்யும். அதுபோல மலசிக்கல், அல்சர் போன்றவையிலிருந்து உடனே விடுபடலாம்.