புற்று நோயை நாமே கண்டறிய முடியும்! மருத்துவர் கூறும் எளிய வழிகள்
புற்றுநோய் இன்றைக்கு பலரும் அஞ்சி நடுங்கும் ஒரு கொடிய நோயாக உள்ளது. புற்றுநோய் உடலில் பல், முடி, நகம் தவிர உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.
புகைபிடித்தல், மதுப்பழக்கம், உடல் பருமன், சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உயர் உப்பு, கதிர்வீச்சு ஹார்மோன்கள், வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள், மற்றும் மரபியல் காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம் என்று சொல்லப்படுகின்றது.
முதியவர்களுக்குத்தான் புற்று நோய்கள் அதிகமாக ஏற்படும் என்றாலும் இன்றைய காலத்தில் இளம் வயதினருக்கும், சிறுவர்களுக்கு கூட சில வகை புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய் செல்கள் உருவான உறுப்பிலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் ரத்தத்தின் மூலமாகவும், நிணநீரின் மூலமாகவும் பரவுகின்றது.
இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் இதிலிருந்து விடுபட முடியும்.
இதனை நாமே ஒரு சில எளிய முறையில், அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். தற்போது அவை எப்படி என்பதை கீழ் காணும் வீடியோ மூலம் தெரிந்து கொள்வோம்.