இரவில் ஓயாத இருமல் தொல்லையா? அப்போ இதை செய்யுங்கள்
சில்லென்ற காற்றை உணரும் போதும் மற்றும் சில்லென்ற மழைச்சாரலை பார்க்கும் போதும் அதில் இணைந்து கொள்ள ஆசை வரவே செய்யும். ஆனால் மழைத்துளி பட்டாலே காய்ச்சல் வந்துவிடும் என்ற அச்சத்தில் மழையோடு மகிழ்ச்சியை பகிராமல் இருப்போம்.
அப்படி இருந்தும் காய்ச்சலும் இருமலும் வரவே செய்கிறது. இதற்கு பருவ நிலை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. நமது தொண்டையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் தந்து நம்மை எரிச் சலூட்ட செய்கிறது.
இந்த இருமலும் சளியும் படுத்தும் எரிச்சல் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. இதனை வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எளிதில் குணமாக்க முடியும். சரி வாங்க.. ஈசியாக சளியை விரட்ட இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை உடனே பின்பற்றுங்க..
- இருமலால் பாதிக்கப்படும்போது தினமும் ஒரு டம்ளர் பாலில் கால் டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வாருங்கள். காலை, இரவு என இரண்டு வேளை ஒரு வாரம் குடித்தால் தொண்டையில் உள்ள சளி நீங்கி சுத்தமாகும்.
- பாலில் மஞ்சள் சேர்க்கும் போது குழந்தைகளும் குடித்துவிடுவார்கள். எந்தவிதமான வாசனையும் வராது. ஆனால் இந்த மஞ்சள் பாலுடன் பூண்டுப்பல்லைத் தட்டி சேர்த்து வந்தால் நிவாரணம் உடனடியாக கிடைக்கும். தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
- நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் பிரச்சனை, காசநோய் போன்றவைகளும் இந்த மாதிரியான வறட்டு இருமலை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து நீங்கள் இருமிக் கொண்டே இருக்கும் போது மார்பு வலி போன்றவை ஏற்படும்.