கொத்தமல்லி இலைகளை 3 மாதங்கள் வரை வைத்திருக்கலாமா?
Healthy Food Recipes
Water
By Kirthiga
கொத்தமல்லி இலையை நாங்கள் தினசரி உணவில் சேர்ப்பதுண்டு. கொத்தமல்லியை உணவின் மணத்திற்காக தான் அதிகமாக பயன்படுத்தவார்கள்.
கொத்தமல்லி இலையில் பல நன்மைகள் காணப்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே!!
இருப்பினும் நாங்கள் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சினை கொத்தமல்லியை எவ்வாறு இரண்டு வாரங்களாவது அழுகாமல் வைத்திருப்பது என்று தான்.
கொத்தமல்லி இலைகளை பாதுகாக்க இந்த வழிமுறையை கடைப்பிடியுங்கள்!!
- சந்தையில் இருந்து கொத்தமல்லி வாங்கும் போது அதில் உள்ள வேர்களை அல்லது அழுகிய இலைகளை அகற்ற வேண்டும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஒரு தே.கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
- அவ்வாறு 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதன் பின்னர் தண்ணீரிலிருந்து எடுத்து ஈரம் உலரும் வரை உலர வைக்க வேண்டும்.
- ஒரு பெரிய பிளாஸ்டிக் பாத்திரத்தில் 2 அல்லது 3 டிஷ்யூ பேப்பர் வைத்து அதில் கொத்தமல்லியை வைத்து அதற்கு மேல் மற்றொரு டிஷ்யூவை வைத்து மூட வேண்டும்.
- பின்னர் தண்ணீர் இல்லாமல் இதை குளிரூட்டியில் வைக்கலாம்.
2 அல்லது 3 மாதங்கள் வரை வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
-
கொத்தமல்லி இலை 2 முதல் 3 மாதங்கள் வரை அழுகாமல் இருக்க கொத்தமல்லி இலைகளிலிருந்து வேர் மற்றும் தண்டுகளை வெட்டி எடுக்க வேண்டும்.
-
அதன் இலை பகுதியை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
-
பின்னர், அவற்றை உலந்த துணியில் வைத்து உலர்த்தவும்.
- பின்னர், அதை பொடியாக நறுக்கி அதை ஒரு ஜிப் உணவுப் பையில் வைத்து, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பையில் காற்று இருக்க கூடாது.
கொத்தமல்லி வாங்கும் போது கவனித்துக் கொள்ள வேண்டிய விடயங்கள்!!
கொத்தமல்லியின் அளவு, நிறம் மற்றும் வாசனையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இல்லையெனில், உணவில் சுவை மற்றும் வாசணை இருக்காது.
எனவே எப்போதும் புதிய வாசனை மற்றும் வெளிர் பச்சை மற்றும் சிறிய இலைகள் கொண்ட கொத்தமல்லி இலைகளை வாங்குவது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US