வீட்டிலேயே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரிப்பது எப்படி? நடிகை அருணா கொடுத்த சூப்பரான டிப்ஸ் இதோ!
கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களுக்கு எப்போதுமே இருந்து வரும் பிரச்னைதான். என்னதான் பார்த்துப் பார்த்து பாதுகாத்தாலும் முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியவில்லை. ஆனால் பழங்காலத்தில் வாழ்ந்த பெண்கள் அழகான, கருமையான, நீளமான கூந்தலை கொண்டிருந்தார்கள்.
அவர்கள் தங்கள் முடிக்கு பயன்படுத்தும் எந்த பொருளிலும் செயற்கை பொருளை சேர்க்காததே இதற்கு காரணமாகும். வீட்டிலேயே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரிக்கலாம். எப்படி தயாரிப்பது குறித்து நடிகை அருணா அவர்கள் இணையத்தில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
தேவையான பொருள்கள்:-
சோப் நட்
சிகைக்காய்
செம்பருத்தி பூ
சந்தனம்
கரிசலாங்கன்னி
காயந்த ரோஜா பூ
செய்முறை:-
முதலில் தேவையான பொருள்களை வெயில் நன்கு காய வைத்து அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சோப்பு கொட்டையை உடைத்து அதன் விதையை எடுத்து விட வேண்டும் . அதனுடன் சுடு தண்ணீர் கலந்து வைத்துக்கொள்ளவும்.
அதோடு சிகைக்காய் மற்றும் செம்பருத்தி இலையை அரைத்து சுடு தண்ணீருடன் கலந்துகொள்ள வேண்டும். தற்போது நுரை நன்றாக வர தொடங்கும். இதனுடன் அரைத்து வைத்த பொடியை சேர்த்துக்கொள்ளலாம். இதனை இரண்டு வருடங்கள் வரை ஷாம்பு மற்றும் கண்டிஷ்னராக இதனை பயணத்தை கொள்ளலாம்.