அட்டகாசமான சுவையில் எளிமையாள முறையில் இனிப்பு பூந்தி செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் இனிப்பு பண்டங்களை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் பண்டிகை நாட்களில் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் இம்மாதம் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வருகின்றன. அதற்கு நீங்கள் வீட்டியே எப்படி இனிப்பு பூந்தி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 3 கப்
- தண்ணீர் ரெட் புட் கலர் ஜெல் - 3 சொட்டு
- பச்சை கலர் பவுடர்
- எண்ணெய் - பொரிப்பதற்கு
- முந்திரி
- திராட்சை
- சர்க்கரை - 2 கப்
- ஏலக்காய் தூள்
- பச்சகற்பூரம்
செய்முறை
1. முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி மிருதுவான மாவாக கலக்கவும்.
2. இரண்டு தனித்தனி கிண்ணங்களில் சிறிது சிறிதாக போட்டு, ஒன்றில் சிவப்பு நிற உணவு வண்ணங்களையும், மற்றொன்றில் பச்சை நிற உணவு வண்ணங்களையும் சேர்த்து கலக்கவும்.
3. இப்போது ஒரு அகன்ற கடாயில் எண்ணெயை சூடாக்கி இதில் ஒரு துளையிட்ட கரண்டியின் உதவியுடன், மாவை சேர்த்து பொரிக்கவும்.
4. பூந்தியை வறுத்த பின் சிவப்பு, பச்சை இரண்டையும் அப்படியே வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைக்கவும். அதன் பிறகு முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.
5. இப்போது சர்க்கரை பாகுக்கு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து, உருகிய பின், மூன்று-நான்கு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். இது தொட்டால் ஓட்டும் தன்மையில் இருக்க வேண்டும்.
6. இப்போது பூந்தியில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், பச்சகற்பூரம் சேர்த்து நன்கு கலக்கவும், பின் சூடான சர்க்கரை பாகு சேர்த்து நன்கு கலக்கவும். ஐந்து நிமிடம் கழித்து நன்றாக ஊறினால், இனிப்பு பூந்தி தயார் உடனே பரிமாறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |