கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருதாணி எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான். ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருதாணி எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- மருதாணி பொடி- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கைப்பிடி
- வெந்தயம்- 1 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு இரும்பு வானலை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தவும்.
பின் ஒரு மிக்ஸி காரில் கழுவி சுத்தம் செய்துவைத்த கறிவேப்பிலையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து சூடான எண்ணெயில் அரைத்த கறிவேப்பிலை, மருதாணி பொடி, வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் நன்கு கொதித்து நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய்யை நன்கு ஆறவைக்கவும்.

இதற்கடுத்து எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலைமுடியின் உச்சி முதல் நுனி வரை தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின்னர் தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |