நீரிழிவு நோயிக்கு சூப்பர் மருந்து! தினமும் ஒரு கிளாஸ் குடித்து பாருங்கள்.. உடனடி தீர்வை பெறலாம்
இந்த நவின காலத்தில் உணவு முறைகள் சத்தானவையாக இல்லாததால் உடலில் பல வித நோய்கள் தாக்குகின்றது. குறிப்பாக பலரை அதிகமாக தாக்குவது நீரிழிவு நோய்.
இதில் இருந்து நம்மை காத்து கொள்ள பூண்டு டீயை குடிக்கலாம். பூண்டில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்துள்ளன. இந்திய உணவுகளில் பூண்டு இல்லாமல் ஒரு உணவு வகையும் இடம்பெறாது.
குறிப்பாக பூண்டு வாயு பிரச்சனைக்கு மிகவும் நல்லது. சிலர் இதனை அவித்தும், அப்படியே வாணலியில் வறுத்து பொடியாக்கி வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வாயு பிரச்னை தீரும்.
இதை தவிர இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் முதலியவற்றைக்கு சிறந்த மருந்தாக செயல்படுகின்றது. இது போன்ற பல நன்மைகள் உள்ள பூண்டில் டீ செய்து குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
தேவையான பொருள்கள்:-
பூண்டு - 4
இஞ்சி - சிறிதளவு
கருப்பு மிளகு - 4-5
தண்ணீர் - 1 கப்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது நசுக்கிய இஞ்சி, 1 டீஸ்பூன் நசுக்கிய பூண்டு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்னர் டீயை வடிகட்டி அதில் நீங்கள் விரும்பினால் சிறிது இலவங்கப்பட்டை, எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இதனை தினமும் பருகி வந்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.